Tuesday 24 April 2012

குபேர பூஜை

தீபாவளி, அக்ஷய த்ரிதியை, வெள்ளிக்கிழமைகளில் வரும் பௌர்ணமி போன்ற நாட்களில் மாலை குபேரனை நினைத்து பூஜை செய்வதால் செல்வம் பெருகும், குடும்பம் விருத்தி அடையும் என்பது நம்பிக்கை.



குபேரனின் திருஉருவப்படத்திற்கு முன் பணம், பொருள் வைத்து பூமாலை சாற்றி 12 அகல் விளக்குகள் ஏற்றி வைக்க வேண்டும். பூ, அட்சதை கையில் எடுத்துக்கொண்டு 12 முறை இந்த ஸ்லோகத்தை சொல்ல வேண்டும்.

த்வாதஸ லிங்கஸ்துதி

சௌராஷ்ட்ரே
ஸோமனாதஞ்ச ஸ்ரீசைல்யே
மல்லிகார்ஜூனம் உஞ்சைன்ய
மஹாகாளீம் ஓங்கார மமலேஸ்வரம்
பால்யம் வைத்யனாதஞ்ச டாகின்யாம்
பீமஸங்கரம் ஸேது பந்தேது ராமேஸம்
நாகேஸம் தாறுகாவனே
வாரணஸ்யாம்ஸூ விஸ்வேஸம்
த்ரியம் பகம்கௌதமீதடே
ஹிமாலயேது கேதாராம் குஸ்மேஸஞ்ச
சிவாலயே ஹேதானி ஜ்யோதி லிங்கானி
ஸாயங்கால ஹபடேர் நித்தயம்
ஸப்த ஜன்மக்ருதம் பாபம்
ஸ்மரணேன வினிஸ்யதி:

குபேர நாமாவளி

ஓம் குபேராய நம:
ஓம் நரவாகனாய நம:
ஓம் சிவஸகாய நம:
ஓம் ஸ்ரீநிவாச ஸந்துஸ்டாய நம:
ஓம் பம்மாவதி ப்ரிய அனுஜாய நம:
ஓம் யக்ஷராஜாய நம:
ஓம் தனதான்யாதிபதயே நம:
ஓம் மணி பத்ரார்ச்சிதாய நம:
ஓம் மான்யாய நம:
ஓம் மஹனீயாய நம:
ஓம் மஹார்ஹ மணி பூஷணாய நம:
ஓம் ஸ்ரீவித்யா மந்த்ர உபாஸஹாய நம:
ஓம் ஸ்ரீ லலிதாம்பிகா ப்ரிய பக்தாய நம:
ஓம் திக்பாலாய நம:
ஓம் நவநாயகாய நம:
ஓம் நிதினாம் பதயே நம:



பின் பால் பாயசத்தை நைவேத்யம் செய்து கற்பூர ஆரத்தி எடுத்து, குங்குமத்தை கரைத்து அதையும் ஆரத்தி எடுத்து நிறைவு செய்ய வேண்டும்.
குடும்பத்தில் அனைவரும் இதில் கலந்துகொண்டு செய்வது நல்லது.
பூஜை முடிந்தவுடன் எல்லோரும் குபேரன் திருஉருவப்படத்திற்கும், பணம் பொருளிலும் அட்சதை தூவி நமஸ்கரிக்க வேண்டும்.

மற்றவர்களையும் அட்சதைபோட சொல்லி அவர்களுக்கு வெற்றிலை, பாக்கு, தாம்பூலம் தருதல் நல்லது.






1 comment:

அம்பாளடியாள் said...

அருமையான பகிர்வு .மிக்க நன்றி பகிர்வுக்கு .