Friday 22 March 2013

தண்ணீரை வீணாக்காமல் இருக்க சில டிப்ஸ் இங்கே...












                      


ஷவரை திருகிவிட்டு ஆனந்தமாக குளிப்பது நன்றாகதான் இருக்கும். ஆனால் ஒரு குடம் நீருக்காக கஷ்டப்படுபவர்களை நினைத்தாவது தண்ணீரை அவ்வாறு வீணாக்காமல் வாளியில் நீர் பிடித்து குளியுங்கள். 

வீட்டை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யத்தேவையில்லை. ஈரத்துணியால் துடைத்தாலே போதும்.

 

தினமும் கைகளால் துவைப்பதைவிட வாரத்திற்கு ஓரிருமுறை வாஷிங் மெஷினில்  துணிகளை துவைக்கலாம்.

கார், பைக் போன்றவற்றை ஈரத்துணியால் துடைத்தால் போதும், நிறைய தண்ணீர் ஊற்றி அலம்ப வேண்டாம்.


                              

ஷேவ் செய்யும்போதும், பல் துலக்கும்போதும் வாஷ் பேசினில் தண்ணீரை திறந்துவிட வேண்டாம்.

காய்கறிகள் அலம்பிய நீரை சேமித்து செடிகளுக்கு ஊற்றலாம். செடிகளுக்கு நீரூற்ற பூவாளிகளை பயன்படுத்தலாம்.



 மொட்டைமாடியில் விழுந்து வீணாகச்  சாக்கடையில் கலக்கும் நீரைக்கூட திறமையாக அறிவியல் முறைப்படி சேமித்து, சுத்திகரித்து உபயோகப்படுத்தலாம்.கிணறு உள்ளவர்கள் கிணற்றில் அந்த நீரை விழச்செய்யலாம். நிலத்தடி நீரும் உயரும்.



இன்றே ஒவ்வொரு துளி நீரையும் சேமித்தால்தான் நாளைய தலைமுறை தண்ணீருக்காக போராடாமல் இருக்கும்.

நன்றி-PTA செய்தி O'01