Wednesday 23 December 2015

தொடங்கும் வேலைகள் தடையின்றி இனிதே நிறைவடைய பாராயணம் செய்ய வேண்டிய பதிகம்




திருஆலவாயில்(மதுரையில்) சமணர்களுடன் வாதிடுவதற்கு புறப்படும் பொழுது சொக்கநாதப்பெருமானை வணங்கி சம்பந்தப்பெருமான் பாடிய பாடல் இது.

திருஞானசம்பந்தப்பெருமான் அனல்வாதம், புனல்வாதம் செய்து சமணர்களை வென்றது நாம் அறிந்ததே.

திருச்சிற்றம்பலம்

பாடியவர்: திருஞானசம்பந்தர்         தலம்: மதுரை          பண்:பழம்பஞ்சரம் 

வேத வேள்வியை நிந்தனை செய்து உழல் 
ஆதமில்லி அமணொடு தேரரை 
வாதில் வென்று அழிக்கத் திருவுள்ளமே
பாதி மாதுடன் ஆய பரமனே 
    ஞாலம் நின் புகழேமிக வேண்டுந்தென் 
    ஆலவாயில் உறையும் எம் ஆதியே

வைதிகத்தின் வழி ஒழுகாத அக் 
கைதவம் உடைக் கார் அமண் தேரரை 
எய்தி, வாது செயத் திருவுள்ளமே
மைதிகழ் தரு மாமணி கண்டனே
    ஞாலம் நின் புகழேமிக வேண்டுந்தென் 
    ஆலவாயில் உறையும் எம் ஆதியே 


மறை வழக்கம் இலாதமா பாவிகள் 
பறி தலைக் கையர் பாயுடுப்பார்களை 
முறிய வாது செயத் திருவுள்ளமே
மறி உலாம் கையில் மா மழுவாளனே
    ஞாலம் நின் புகழேமிக வேண்டுந்தென் 
    ஆலவாயில் உறையும் எம் ஆதியே 


அறுத்த அங்கம் ஆற ஆயின நீர்மையைக்
கறுத்த வாழ் அமண் கையர்கள் தம்மொடும் 
செறுத்து, வாது செயத் திருவுள்ளமே
முறித்த வாண் மதிக் கண்ணி முதல்வனே 
    ஞாலம் நின் புகழேமிக வேண்டுந்தென் 
    ஆலவாயில் உறையும் எம் ஆதியே 


அந்தணாளர் புரியும் அருமறை 
சிந்தை செய்யா அருகர் திறங்களைச் 
சிந்த வாது செயத் திருவுள்ளமே
வெந்தநீறு அது அணியும் விகிர்தனே
    ஞாலம் நின் புகழேமிக வேண்டுந்தென் 
    ஆலவாயில் உறையும் எம் ஆதியே 


வேட்டு வேள்வி செயும் பொருளை விளி 
மூட்டு சிந்தை முருட்டு அமண் குண்டரை 
ஓட்டி வாது செயத் திருவுள்ளமே
காட்டில் ஆனை உரித்த எம் கள்வனே 
    ஞாலம் நின் புகழேமிக வேண்டுந்தென் 
    ஆலவாயில் உறையும் எம் ஆதியே 
  


அழல் அது ஓம்பும் அருமறையோர் திறம் 
விழல் அது என்னும் அருகர் திறத்திறம் 
கழல வாது செயத் திருவுள்ளமே
தழல் இலங்கு திருவுருச் சைவனே 
    ஞாலம் நின் புகழேமிக வேண்டுந்தென் 
    ஆலவாயில் உறையும் எம் ஆதியே 

நீற்று மேனியர் ஆயினர் மேல் உற்ற 
காற்றுக் கொள்ளவும் நில்லா அமணரைத் 
தேற்றி வாது செயத் திருவுள்ளமே
ஆற்ற வாள் அரக்கற்கும் அருளினாய்
    ஞாலம் நின் புகழேமிக வேண்டுந்தென் 
    ஆலவாயில் உறையும் எம் ஆதியே 


நீலமேனி அமணர் திறத்து நின் 
சீலம் வாது செயத் திருவுள்ளமே
மாலும் நான்முகனும் காண்பரியதோர் 
கோல மேனியது ஆகிய குன்றமே 
    ஞாலம் நின் புகழேமிக வேண்டுந்தென் 
    ஆலவாயில் உறையும் எம் ஆதியே 


அன்று முப்புரம் செற்ற அழக நின்
துன்று பொற்கழல் பேணா அருகரைத் 
தென்ற வாது செயத் திருவுள்ளமே
கன்று சாக்கியர் காணாத் தலைவனே 
    ஞாலம் நின் புகழேமிக வேண்டுந்தென் 
    ஆலவாயில் உறையும் எம் ஆதியே 


கூடல் ஆலவாய்க் கோனை விடைகொண்டு 
வாடல் மேனி அமணரை வாட்டிட
மாடக் காழிச் சம்பந்தன் மதித்த இப் 
பாடல் வல்லவர் பாக்கிய வாளரே 

திருச்சிற்றம்பலம்